Posts

Showing posts from April, 2011

சைக்கிள்

Image
சின்னப் பசங்க எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டறதுன்னா ரொம்பவே புடிக்கும். எனக்கும் தான். எந்த வயசில கத்துக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகமில்ல. ஆனா ஆறாவது படிக்கும்போது ஒரு லீவு நாள், சனிக்கிழமைன்னு நினைக்கறேன், கால்வண்டி (சின்ன சைக்கிள்) 2 மணி நேர வாடகைக்கு எடுத்து சுத்திதிட்டு கடையில விட நேரமாயிடுச்சுன்னு வேகமா ஓட்டினேன். அப்போ செயின் கழண்டு போச்சு. பெடல் கிழிச்சு கால்ல காயம் ஆச்சு. அது மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. தழும்பா. அப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சாச்சு. வீட்லயே அப்பாவோட ராலே (Raleigh. ராலே-வை நெல்லைத் தெலுங்கென்று நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) சைக்கிள் இருக்கும். ஸ்டாண்ட் போட்டபடி கொஞ்ச நேரம் ஓட்டுவேன். அப்பறம் இறங்கி வந்திடுவேன். ஏன்னா, சைக்கிள் பரண் மேல இருந்துச்சு. அது பரண் மேல போனதுக்கும் ஒரு கதை இருக்கு. அப்போல்லாம் பெரிய சைக்கிள்-ல ரெண்டு பக்கமும் கால் போட்டு ஓட்ட தெரியாது. பாருக்கு நடுவில கால் (குறுக்கு பெடல் / குரங்கு பெடல்) போட்டு தான் ஓட்டத் தெரியும். அப்படி ஒட்டும்போதே ரேஸ். பெரிய சாம்பியன்ஷிப் ரேஸ்-ல்லாம் கிடையாது. தெ

பிசிபேளாபாத்

இந்த வெள்ளி கிழமையும் எப்போதும் போலவே 8.30 க்கு ஆரம்பித்து 8.50 க்கு விடிந்தது. மிக சாதாரண வெள்ளிக்கிழமை / விடுமுறை நாளாகவே பட்டது எனக்கு. ஆனால் தங்கமணி அப்படியொரு முடிவெடுத்தபோது தான் புரிந்தது, என் நினைப்பு எவ்வளவு தவறானதென்று. மதிய உணவிற்கு பிசிபேளாபாத் பண்ணப் போவதாக சொன்னவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இன்னிக்கு என்னை சோதித்து பார்க்க முடிவெடுத்தாச்சுன்னு. பெரும்பாலான கணவர்களை போல, நானும் புது பொண்டாட்டியின் சமையலுக்கு பரிசோதனை கூடத்து "சிங்கம்" தான். முந்தைய நாள் ஹோட்டலுக்கு கூட்டிப் போகாததன் விளைவு இப்படி மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொள்ளும். என் மனைவி சமைத்து. ஆனாலும் அவள் ரொம்ப சமத்து (அடுத்த வேளைக்குஅந்த பிசிபேளாபாத் தும் கிடைக்காம போயிடுமே!!!) சரி. எவளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா!!! என்றெண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டேன். கிச்சனில் காய்கறி, பாத்திரம், இன்னபிற என எல்லாத்தையும் தயார் செய்துவிட்டு, நேராக வந்து 'லேப்டாப்'பிக் கொண்டிருந்த என்னிடமிருந்து அதை பாசமாக பறித்தார் தங்கமணி. எதுக்குன்னு க