Posts

Showing posts from February, 2018

பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை

Image
காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை".. இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை. நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய்

ரசனை

ரசனை.. பாஷை ஓரளவுக்கே புரிந்தாலும் மலர் டீச்சர் என சொல்லிச் சொல்லி பேருவகை கொண்டிருந்த குரூப்பில் திடீரென ஒற்றைக் குரலாக ஒலித்த ஷெரில் பெயரைக் கேட்டு ஊர் உலகமே ஜிமிக்கி கம்மல் பாட்டைத் தேடியது.. சில நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்த ஷெரில் பெயரை தொங்கலில் விட்டுவிட்டு இப்போது எல்லாரும் ப்ரியா வாரியர் பெயரை நம்பர் 1 ஆக்கியிருக்கிறார்கள். அந்தக் கண்சிமிட்டல் தான் எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறியிருக்கும். எத்தனை இளவட்டங்களுக்கு போதையேற்றியிருக்கும். நினைவுகளே நிகழ்விலும் அமையப்பெற்றவர்கள், இருவருமாக சேர்ந்து அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொள்கிறார்கள். வெறும் நினைவுகளாக மட்டுமே அமையப்பெற்றவர்கள் யதார்த்தத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்கள். கொலவெறி பாடல் உலகளாவிய அளவில் ரசிக்கப்பட்டது. இப்போது குறும்பா-வும் சொடக்கு மேல சொடக்கும் எப்.எம்-களின் தேசிய கீதம். வெள்ளைப் பனிமூட்டத்தின் நடுவே பனி சிற்பம் போல சிலருக்கு தோன்றும் "அந்த ஒருவர்", வேறு யாருக்கோ "ப்பாஹ்" என ரியாக்ஷன் கொடுக்குமளவிற்கு இருப்பது இந்த பாழாய்ப்போன ரசனையாலே. ரோஸ் கலரில் சிலுக்கு சட்டை எ