Posts

Showing posts from March, 2018

தரிகெட்டுப் போனேனே...

Image
உள்ளங்கையில் 2 இடங்களில் காயம். வலது முழங்காலில் நல்ல சிராய்ப்பு. அங்கங்கே தசைப்பிடிப்பு. கைகால்களில் வலி. நான் ஏன் இப்படித் தரிகெட்டுப் போனேன்? காரணம் சிட்டி நாராயணனும், கோகுலனும் தான். பெரியவன் குங்பூ வேண்டாம். கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று சொன்னதிலிருந்து தொடங்கியது எனக்கு போதாத வேளை. வெள்ளிக்கிழமை காலைகளில் நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பல நாட்களாக (வருடங்களாக) என்னை அழைத்தும் நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன். வியாழக்கிழமை பின்னிரவு 6 மணிக்கு (அதாவது வெள்ளி காலை 6 மணிக்கு) விளையாட அழைப்பார்கள். நித்ராதேவி சமேத சொப்பனேஸ்வரர் அருளாசியில் மூழ்கியிருக்கும் வேளையில் விளையாட அழைத்தால் பின்னே என்ன செய்வதாம்.. அதனால்தான் பாராமுகம். அதிலும் நடுவில் கொஞ்சம் காலமாக (ஜஸ்ட் 20 வருடங்கள் மட்டும்) கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. மற்றபடி நான் ஒரு ஸ்டார் பிளேயர். 8வது படிக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாட காலை டிபன் முடித்துவிட்டு களத்திற்கு(கிரவுண்ட்) சென்றேன். மதியம் சாப்பிட வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன், சிக்ஸர் போர் என விளையாட்டு ஆர்வத்தில் மறந்துவ

கிச்சா / கிச்சாமி / சாமி / கிருஷ்ணஸ்வாமி

ஒரு தசாப்தமும் ஒரு வருடமும் பஹ்ரைனிலும் ஒரு வருடம் துபாய்/மஸ்கட் என மொத்தம் 12 வருடங்கள் வளைகுடா வாழ்க்கை முடித்து கிழக்கு ஆசியாவிற்கு செல்கிறார். பஹ்ரைனில், ரஞ்சனி மாமா என்றழைக்கும் வெகுசிலரில் ஒருவர். எங்களுக்கு அண்ணா / சார் / கிச்சா என தோன்றும் பெயர்களில் எல்லாம் அழைப்போம். பெரும்பாலும் ஒற்றையாய் மட்டுமே சத்சங்கம் வருவதால் அவர் குடும்பம் பற்றி அத்தனை பரிச்சியம் இல்லை. பகவத் ராமானுஜர் நாடகத்தின் வாயிலாகத்தான் அவர் மகன் ஆதித்யாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கராத்தே பயின்றதால் உடல்நலத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் பையன். என்ன சாப்பிடுகிறோம் அதில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறது எவ்வளவு கார்போஹைட்ரேட் என பார்த்து பார்த்து சாப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். மற்றபடி பரமசாது.. அப்பாவைப் போலவே.. கல்லூரி சேர்ந்தாகிவிட்டதால் அவனும் அம்மாவும் இப்போது சென்னைவாசிகள். நானும் சிட்டி நாராயணனும் சேர்ந்திருக்கும் சமயத்தில் மாட்டினால் கண்ணீர்விடும்வரை கலாய்ப்போம். நரசிம்மன் அண்ணா கத்தார் போனபிறகு பெரும்பாலும் கிச்சா சார் தான் மாட்டுவார். ஏதாவது சொல்லி சமாளிப்ப