Posts

Showing posts from April, 2018

எதிராத்து துளசி

Image
எதிர் வீட்டுக்கு ஸ்ரீராம் மனைவி மக்களுடன் குடித்தனம் வந்திருக்கார். பேருக்கேத்தா போலவே, லவ குசா மாதிரி 2 ஆம்மனாட்டி பசங்க. அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவார். அவர் வீட்டம்மணியும் எங்காத்து தங்கமணியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டா. கேக்கவா வேணும்.. இவா லூட்டியில மொத்த பில்டிங்கும் ஏக களேபரம் தான். ஸ்ரீராமன் பேருக்கேத்தா மாதிரி ஏகபத்தினி விரதனா இருப்பார்-னு பாத்தா, அப்பறமாதான் தெரிஞ்சுது அவருக்கு எங்காத்து துளசி மேல ஒரு கண்-னு. துளசி அத்தனை அர்த்தபுஷ்டியா இல்லேன்னாலும், ஓரளவுக்காவது பாக்கற மாதிரிதான். ஒரு சமயம் அவர் துளசியைப் பாக்கறதை நான் பாத்துட்டேன். உடனே ஏதேதோ காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டார். அன்னிலேர்ந்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்பறம் நான் இருக்கற சமயத்திலே வீட்டுக்கு வர்றதையே அவாய்ட் பண்ணிடுவார். வந்தாலும் 5-10 நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை. இந்த சின்ன சமயத்திலயும் துளசியைப் பாக்க அவர் தவறியதில்லை. அதை நானும் பாக்க தவறியதில்லை. நான் கொஞ்சம் முறைச்சவுடனே புரிஞ்சுண்டு கிளம்பிடுவார். இதை இப்படியே விடக்கூடாது-ன்னு முடிவுபண்ணி, ஒருநாள் எங்காத்து தங்கமண

ஆண்டவன் ஸ்வாமிகள்

நேற்று காலை வரை அக்ஷதையுடன் அருளாசி வழங்கி உயர்வற உயர்நலம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்த நம் ஆசார்யன், இன்று அந்தி சாய்வதற்குள் அந்த அமரரின் அதிபதியுடன் ஐக்கியமாகிவிட்டார். சிட்டி குரூப்பில் வேலை செய்துவந்த சமயம். ஒரு வார இறுதியில் திருவயிந்திபுரம் நண்பர் ஒருவர், ஆண்டவன் அங்கு எழுந்தருளியிருப்பதாகவும், சேவிக்கப் போகலாமா என்று கேட்டார். மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்போது நம் சம்பிரதாய விஷயங்களில் அத்தனை பெரிய ஞானம் இல்லாமலிருந்த சமயம் (இப்போதும் மாற்றமில்லை). பைக்கில் சென்னையிலிருந்து திருவயிந்திபுரம் வரை செல்லும் நீண்ட பயணத்திற்காகவே ஒப்புக்கொண்டேன். (குறிப்பு: அம்மா வழியில் ஆண்டவன் சிஷ்யர்கள். மாமாக்கள் எல்லோரும் ஆண்டவனுக்கு நெருக்கம். சின்ன மாமாவின் பெயரை சொன்னால் தெரியும் அளவுக்கு பரிச்சியம் கொண்டவர்கள்) 2 நாட்கள் அவருடனே தங்கியிருந்து தேவநாதனையும் ஆண்டவன் ஸ்வாமிகளையும் திவ்யமாக சேவித்தேன். காலை வந்திருந்த அனைவருக்கும் அருட்ப்ரஸாதம் வழங்கினார். பிறகு ததியாராதனை ஆரம்பமானது. அங்கிருந்த சிலருடன் ஏதோ கேலியாக சிரித்துப் பேசிவிட்டு ஆண்டவன் ஓய்வெடுக்க அறைக்கு