Posts

Showing posts from April, 2019

ஏர்போர்ட்

Image
எப்போதுமே பல உணர்ச்சிமயமான நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் இடம் எனக்கு தெரிந்தவரையில் ஏர்போர்ட். எத்தனை சுவாரஸ்யங்கள் ஏக்கங்கள் பிரிவுகள் கண்ணீர்கள் பாசப்பிணைப்புகள் கோபங்கள் துக்கங்கள் சிரிப்புகள் வரவேற்புகள் வழியனுப்புகள் இன்னும் சில பல புகள் கள் ள் ள் ள் ள்... அலுவல் விஷயமாக ஊருக்குப் போயிருக்கும் அப்பாவை வரவேற்க காத்திருக்கும் குட்டிப்பெண்ணின் கண்களில் இருக்கும் தவிப்பு, உள்ளத்திலிருக்கும் பாசம், தனக்கு என்ன வாங்கிவருவாரோ என்ற அந்த ஏக்கம்.. நண்பனை/நண்பியை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்று காதோரம் ஏதோ ஏடாகூட ஜோக்கை சொல்லி கொல்லென சிரிப்பை சிதறிவிட்டு.. பார்க்கும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. காதலியை வழியனுப்ப வந்தவனின் கண்களில் இருக்கும் அந்த ஏக்கம்.. வரவேற்க வந்தவன், இந்த நொடி வருவாளா அடுத்த நொடி வருவாளா என காத்திருக்கும் கண்களில் இருக்கும் தவிப்பு கல்யாணத்திற்கு பிறகு உற்சாகமாக மனைவியை வழியனுப்பி வைக்கும் கணவனின் உடல்மொழி.. ஆனால் சோகமாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் முகம்.. அதுவே திரும்பிவரும் மனைவியை வரவேற்க உற்சாகமாக

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்

Image
மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் என்ற பதத்தை நம்மில் பலர் கேட்டிருப்போம். ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவே. அழகான சுந்தரகாண்டம் பாராயணமும் மதுரமான மதுரகவியாழ்வார் திருநக்ஷத்ரமும் ஒருசேர நடந்தது. நடந்து முடிந்த சென்னை பெங்களூரு IPL போட்டி போல, மெதுவாக தொடங்கி கடைசி ஸர்க்கம் நெருங்க நெருங்க பரபரவென ஓடி ஒரு ரன்னில் தோற்றது போல ஒருமணிக்கு முடிக்கவேண்டிய பாராயணத்தை ஒன்னேகால் சுமாருக்கு முடிப்போம். இதுவே வழக்கமாகிவிட்டபடியால் நம்ம ஆஞ்சி.. (அதாங்க ஆஞ்சநேயர்) நம் ஸ்வபாவம் தெரிந்து போகிற போக்கில் போகட்டுமென விட்டுவிட்டார். நண்பர் ஒருவர் மதுரமான பலாச்சுளைகளை பெருமாளுக்கு நைவேத்யம் செய்யக் கொண்டுவந்தார். தேனில் ஊறிய பலாச்சுளைகள் பெருமாளுக்கு உகக்குமோ இல்லையோ பாகவதர்களாகிய நமக்கு (சரி சரி.. பாபியான எனக்கு) உகக்குமே என்றெண்ணி உடனே தங்கமணியை தேன் வாங்கிவரச்சொல்லி பலாச்சுளைகளை ஊறப்போட்டு, பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாகிவிட்டது. ஆனால் நீள்வெட்டாக இல்லாமல், குறுக்காக வெட்டி தேனில் ஊறப்போட்டு விட்டார்கள். சரி போகட்டும்.. தவறே செய்திருந்தாலும் சரணமடை