விக்ரம் வேதா(ளம்)
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjggVNrKRwVILBptGjCpOwJwwavTFZYiAUI8P7gH9ZY1S6SVvQWca_CjHKQAFnZuxb3dF_e-Cgn1G7S1RGvjzlr0h16FFiuW42ZoL8jBSMV7QDQfXGDaMHSnXmc75vEoqdMv1yep4o809U/s400/index.png)
அவர் பெயர் முருகனடிமை. அசந்தர்ப்பமான சமயங்களில் (கொட்டாவி விடுவது மாதிரி) நம்மையும் மறந்து அப்பா, அம்மா, கடவுளே.. என்று சொல்லுவோம். இவர் அப்படி சொல்லும் வார்த்தை - முருகா. மதுரை பூர்வீகம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் கள்ளழகரின் காற்று பட்டு, சமயங்களில் வீர வைணவராகவும் இருப்பார். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் முருகனடிமையே. மற்றபடி தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் பாவம், நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போலத்தான் வாழ்க்கை. பிரச்சனைகளைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டும், பயத்தையே பசிக்கு உணவாகவும் சாப்பிட்டும் காலம் கடத்துபவர். ஒரு சமயம் ஒரு இடத்திற்குப் போக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தப்பறம், இப்படியெல்லாம் நேரா போகவேண்டிய இடத்துக்கு டயத்துக்குப் போயிட்டா நம்ம மானம் மருவாதை என்னாகிறது-னு நினைச்சு, வேற பஸ்ஸில ஏறி சம்பந்தமே இல்லாத இடத்துக்குப் போயி, அதுக்குள்ள எல்லாரும் எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க-ன்னு 7-8 தடவை போன் பண்ணி சுமாரா ஒன்னரை மணிநேரம் லேட்டா போனதுக்கு அப்பறம்தான் இவருக்கு நிம்மதியா தூக்கமே வந்துச்சு. இது சும்மா சாம்பிள் தான்.. இவர் போகும் இடத்திற்கு பிரச்சனை வருமா, அ