Posts

Showing posts from 2015

CIO - சென்சஸ்

நேற்று காலை முதல் இப்படி  ஒரு எச்சரிக்கை மெசேஜ் வாட்சாப்பில் சென்னை மழையை விடவும் பயங்கரமாக கொட்டிக்கொண்டு இருந்தது. தனி மனிதர்கள், க்ரூப் என பாகுபாடின்றி பலரிடம் இருந்து வந்துகொண்டிருந்தது. மெசேஜைப்  படிச்சேன்.. நானும் ரவுடி தானே.. என் பங்கிற்கு நானும்  பலருக்கும் பல க்ரூப்களுக்கும் பார்வேர்டினேன். ஆனா அதை ஒன்னும் அத்தனை பெருசா எடுத்துக்கல. அதனால வாட்ஸாப் ஆத்தா எனக்கு லைட்டா பாடம் புகட்ட நினைச்சு, சாயங்காலமே ஒரு சம்பவத்தை நடத்திட்டா. வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலயே இண்டர்காம் பெல் சத்தம் கேட்டது. தங்கமணி தான் எடுத்தார். யார் நீங்க? எந்த ப்ளாட்? என்றெல்லாம் கேட்டுகொண்டிருந்தார். சரியா பதில் சொல்லலை-ன்னா கதவை திறக்காத என்று நான் சொன்னேன். உடனே இண்டர்காமை என்னிடம் கொடுத்துவிட்டார். எதிர்முனை ஆசாமியிடம் யார் நீ? எந்த ப்ளாட்-க்கு போகணும்? எதுக்கு-ன்னு விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தேன். சென்ட்ரல் இன்பர்மேடிக்ஸ் ஆர்கனைசேசன்-ல (CIO) இருந்து வந்திருக்கேன். உன்கிட்ட பேசணும்-னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தான். (பழைய)காக்கிசட்டை, குருதிப்புனல், வேட்டையாடு விளையாடு எல்லாப்

பிரசவம்

முடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கமாக எனக்கு ஒருவர் முடிதிருத்துவார். நடுவில் சில நாட்கள் அவரைக் காணவில்லை. நேற்று சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். ஊருக்கு போயிருந்தீங்களா என்று கேட்டேன். ஆமாம் சார். என் மனைவி இறந்துட்டாங்க. அதுக்காக போயிருந்தேன் என்றார் சாதாரணமாக. எப்படி என்றேன் நான். 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அது தெரியாமலே சில நாட்கள் அவள் இருந்துவிட்டாள். அதனால் அவளும் இறக்க நேரிட்டது என்றார். அவரை சங்கடப்படுத்திவிட்டோமோ என்று பட்டது எனக்கு. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொன்னேன். போதும் சார். இறைவன் ஒருவனே போதும். வேறு யாரும் வேண்டாம் என்றார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து இத்தனை சீக்கிரம் மீண்டு விட்டாரா அல்லது விரக்தியில் சொன்னாரா தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, உங்களுக்கு வேறு குழந்தை இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு, அந்த கேள்வியை கேட்டே இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. "2 குழந்தைங்க இருக்காங்க சார். ஒ

வெக்கேஷன்

இந்த வெக்கேஷனுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு மாசம்.. கரெக்ட்டா சொல்லணும்-னா அடுத்த மாசம் இந்நேரம்-நு கணக்கு பண்ணுவோமே அந்த ஒரு மாசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவா நகரும். இன்னும் 30 நாள் இருக்கு-ன்னு பாத்து வெச்சுட்டு ஒரு 2 வாரம் கழிச்சு பாத்தா, இன்னும் 28 நாள் பாக்கி இருக்கும். இப்படியே ஒவ்வொரு நாளா தள்ளி தள்ளி நமக்கு நாக்கு தள்ளிடும். அந்தா இந்தா-ன்னு ஒரு வழியா ட்ராவெலிங் ப்ரம் மனாமா, பஹ்ரைன் டு சென்னை, இந்தியா-னு பேஸ்புக் -ல ஸ்டேடஸ் போட்டு வண்டி ஏறிடுவோம். சென்னை வந்து, ப்ளைட் டயர் ரன்வே-ல டச் ஆகுற அந்த நொடியில இருந்து பாஸ்ட் பார்வர்ட் (FAST FORWARD) பட்டன் ஆட்டோமாடிக்கா ஆன் (ON) ஆயிடும் அதுவும் சாதாரண பாஸ்ட் பார்வர்ட் இல்ல.. ஜெட்டுக்கு பின்னாடி பயர் வெச்சா மாதிரி பாஸ்ட் பார்வர்ட். ஏர்போர்ட்-ல இருந்து ஆட்டோ/டாக்சி புடிச்சு வீட்டுக்கு வந்து அப்பாடா-ன்னு உட்காந்தா ஒரு வாரம் டஸ்... (அதாங்க இஸ்-ங்கரதுக்குள்ள டஸ்-னு போயிடும்) ப்ரெண்ட்ஸ்/சொந்த பந்ததுக்கெல்லாம் போன் போட்டு பத்து நிமிஷம்.. பத்தே பத்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஒரு வாரம் டஸ்... வர்றதே வருஷத்துக்கு ஒரு தடவை தான்.. நங

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்

Image
முப்பது வருடங்களைக்  கடந்து நிற்கும் இந்த தருணத்தில், சற்றே பின்னோக்கி நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். வலி, விரக்தி, மகிழ்ச்சி, வறுமை, கல்வி, பள்ளி, கல்லூரி, சந்தோஷம், அழுகை, வேதனை, கோபம், சண்டை, உறவுகள், நண்பர்கள்..... இப்படிப் பல விஷயங்கள் மனக்கண்ணில் விரிகிறது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.     பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றியும் நீதியைப் போலத்தான். Justice Delayed is Justice Denied என்பது போல நன்றியையும் உடனுக்குடன் தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் போன மாதம் செய்த உதவிக்கு நன்றி என்று சொன்னால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இவ்வளவு சொல்கிற நானே, காலம் தாழ்த்தித் தான் நன்றி சொல்கிறேன். நாட்கள், மாதங்கள் இல்லை. சில பல வருடங்கள் கழித்து நன்றி சொல்கிறேன். முதலாவது நன்றி இறைவனுக்கு. நான் ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்றாலும், வாழ்வில் இந்த இடத்தை அடைய உறுதுணையாய் இருந்த என் அப்பா, அம்மாவுக்கு நன்றிகள். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி