Posts

Showing posts from March, 2017

பாஸிங் - 2

Image
இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று நான் நினைத்து முடிப்பதற்குள் "ஆப்டர் சூபர்வைசர் கோ டு ரெஜிஸ்தரேசன்" (After subervisor go to registharesan) என்றான். ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க என்று கன்பார்ம் ஆகிவிட்டது. வண்டியை பார்க்கிங் ஏரியாவுக்கு விட்டேன். ஏற்கனவே அங்கு டபுள் பார்க்கிங்கில் இருந்த நண்பனின் வண்டிக்கருகில் என் வண்டியை நிறுத்திவிட்டு, "ஏதோ சூப்பர்வைஸரப் பாத்து கையெழுத்து வாங்கணுமாம். அப்பறம் ரெஜிஸ்ட்ரேஷன் போகணுமாம். நீ கொஞ்சம் வெயிட்பண்ணு. இந்தா என் வண்டி சாவி. யாராவது வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுக்க வந்தா, என் வண்டியை நகர்த்தினாதான் அவங்க வண்டிய எடுக்க முடியும். நீ கொஞ்சம் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் இருக்கும் இடம் என்று தோராயமாக கூறிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன். இரண்டு மூன்று பில்டிங் இருந்ததால் எந்த பில்டிங்கிற்குள் நுழைவது என்று குழப்பம். கொஞ்சம் சுற்றும்முற்றும் பார்த்தேன். நண்பனின் வண்டியை பாஸிங் செய்த அரபி ஆபீசர் நின்றுகொண்டு வண்டிகளை ஒழுங்கு படுத்துவதும், சில வண்டிகளை சோதனையிடுவதுமாக

பாஸிங்

Image
சென்ற வாரம் நானும் நண்பனும் வண்டியை பாஸிங் (நம்ம ஊர் FC) கொண்டு சென்றோம். அரைமணி நேரப் பயணத்தில் சோதனைச் சாவடியை அடைந்தோம். எனக்கு சென்ற வருடம் பாஸிங் சென்று வந்த அனுபவம் உண்டு என்கிறபடியால் அவனிடம் "ரொம்ப கறாரா இருப்பாங்க, சின்னதா ஏதாவது தப்பு நடந்தாலும் பெயில் பண்ணி அனுப்பிடுவாங்க. பட்லர் இங்கிலீஷ் தான் பேசணும். உனக்கு இங்கிலீஷ் தெரியும்ன்னு ஸ்டைலா பதில் சொல்லாத. அங்க இருக்கற அரபி ஆபீஸருக்கு புரியாது. அதுக்காகவே பெயில் பண்ணிடுவான்" என்று கொஞ்சம் அளந்துவிட்டிருந்தேன்.   மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் க்யூ-வில் நிற்பது போல், அடித்துபிடித்து இருவரும் அவரவர் வண்டியுடன் ஒரே க்யூவில் நின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக க்யூ நகர்ந்தது. சோதனை சாவடி "ராம்ப்"பில் (Ramp) ஏற தயாராக நான். என் வண்டிக்குப் பின்னாடி நண்பனும் அவனது வண்டியும்.   வந்தார் ஒரு அரபி ஆபீசர். நேரே நண்பனிடம் சென்று அவனது வண்டி ஓனர்ஷிப் அட்டையையும் அவனது ஓட்டுநர் உரிம அட்டையையும் வாங்கிப் பார்த்துவிட்டு வண்டியை நோட்டம் விட்டார். லைட், பிரேக் எல்லாம் சரியாக இருக்கிற

நாளைய வாசல் - 2

Image
நீங்க போராட்டம் பண்ணீங்க. திட்டத்தை நிறுத்தினாங்க. சரிதான். ஆனா முழுசா நிறுத்தலை. கொஞ்ச காலம் கழிச்சு 2025 வாக்கிலே விவசாயிங்களுக்கு நடுவில ஒரு ஜாதி பிரச்னையை கிளப்பிவிட்டு, வெட்டிக்க வெச்சாங்க. அதிலேருந்து தப்பிச்சவங்கள, கொலையாளிகள்-ங்கற பேரில் கைதுபண்ணி ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. எதிர்த்துப் பேசினவங்களை வாயில கரண்ட் வயரைக் குடுத்து கொன்னுட்டாங்க. அப்பறம் அவங்க நிலத்தை எல்லாம் ஆக்கிரமிச்சு ஒரு எதிர்ப்பு கூட இல்லாம திட்டத்தை செயல்படுத்தினாங்க. 2045-ல் ஒரு பூகம்பம் வந்திச்சு. தமிழகமே, ஏன் இந்தியாவே பாக்காத 13 ரிக்டர் அளவு. எல்லாம் மண்ணோட மண்ணாப்போச்சு. தஞ்சாவூரையும் அதை சுத்தித்தியிருந்த 11 மாவட்டங்களும் அழிஞ்சிடுச்சு. நீராதாரம் எல்லாம் அழிஞ்சிடுச்சு. அதோட முடிஞ்சிருக்கும்-ன்னு பாத்தா, அதுக்கப்பறம் வந்த கேன்சரும் தோல் நோய்களும் இன்னும் நிறைய மக்களை அழிச்சிடுச்சு. பிழைச்சவங்க எல்லாம், பக்கத்துக்கு மாநிலங்களுக்கு கொத்தடிமையா போயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகளுக்கு  எல்லாம் இப்போ படிப்பு வாசனையே இல்ல. அடிமையாவே வளத்துட்டாங்க. நீராதாரம் இல்லையா? மழை பெய்யலியா? வ

நாளைய வாசல் - 1

சைரன் வைத்த வண்டியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நந்தம்பாக்கம் அரங்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். டிஜிட்டல்  3D பேனர்கள் பளிச் பளிச்சென கண்ணைக் கவர்ந்தன. ஆம். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் 3D தொழில்நுட்பம் தான்.   பக்கத்தில் அந்த சைரன் வண்டியையும் அமைச்சரையும் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான். ஏங்க இந்த பழைய பேனர் எல்லாம் இல்லாம, இந்த புது டிஜிட்டல் பேனர் நல்லா இருக்குல்ல?   வரைதல், பெயிண்டிங், அச்சடிக்கப்பட்ட பேனர் இதெல்லாம் ஒழிந்து ஒரு மாமாங்கமாகிவிட்டது. இரண்டே இரண்டு தட்டையான குச்சி போன்ற வஸ்து தான் தேவை. மேலும் கீழுமாக செட் செய்து கட்டிவிட்டால் போதும். அந்த குச்சிகளில் இருந்து ஒளிக்கற்றைகள் வந்து, அதில் காட்சிகள் விரியும். இதுவும் ஒருவகை ப்ரொஜெக்ஷன் நுட்பம் தான். ஆனால் திரையிட சுவரோ திரையோ தேவையில்லை. அந்த குச்சிகளில் இருந்து, காட்சிகள் விரியும். இடத்திற்கு ஏற்ப நீள அகலங்களை கூட்டவோ குறைக்கவோ முடியும். அச்சிடப்பட்ட பேனர்களை போல அல்லாமல், இந்த டிஜிட்டல் பேனர்களில் தலைவர்கள் நடக்கலாம் சிரிக்கலாம

அம்மா

Image
    கோபிசெட்டிபாளையத்தில் பிறந்து சில வருடங்களில் தாத்தாவின் மறைவிற்கு பிறகு மாமாக்கள் கோவை சென்னை என இரண்டு ஊர்களுக்கு வேலைக்கு செல்ல, குடும்பம் கோவைக்கு மாற்றலானது. 7 பேர் கொண்ட பெரிய குடும்பம். பாட்டியும் அம்மாவும் கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறி ட்ரெயின் பிடித்தனர்.   பெரியம்மாவின் (அம்மாவின் அக்கா) திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்வியல் நடைமுறைகளைக் கண்ட பாட்டி, கண்டிப்பாக பட்டணத்து மாப்பிள்ளைக்கு இரண்டாவது பெண்ணை (அம்மாவை) திருமணம் செய்து கொடுப்பதில்லை என முடிவு செய்து மும்மரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினார். இதனாலேயே அப்பாவுக்கு யோகம் அடித்தது எனலாம்.   அப்போது இரண்டாவது பெரியப்பா (அப்பாவின் அண்ணா) எப்படியோ இந்த தகவலை தெரிந்துகொண்டு பாட்டியை சந்தித்துப் பேச, சீக்கிரமே பீபீப்பி டும்டும்டும். அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். ஆனால் இந்த வரனையும் பொருத்தமில்லை என்று சொல்லி தட்டிக்கழிக்கக்கூடும் என்பதால், கடைசிவரைக்கும் அம்மாவின் ஜாதகத்தை அப்பாவிடம் காட்டவேயில்லை.   திருமணத்திற்குப் பிறகு ஜாதகத்தைப் பார்த்தால், ஒரே ஒரு பொருத்தம்