Posts

Showing posts from May, 2011

சிதைவு

சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான். நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை

ஆட்டுக்கால் 11 ஜி

டெஸ்டிங் யுனிட்ல எல்லாரும் ரொம்பப் பரபரப்பா இருந்தாங்க. ஆட்டுக்கால் 11 ஜி 'லைவ்' டேட்டா பேஸில் எரர் அடித்ததே அவங்க பரபரப்புக்கு காரணம். அவங்களால எங்கருந்து எரர் அடிக்குதுன்னே கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா இதே டேட்டா பேஸை இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணின இன்னொரு யுனிட், எரர் எதுவும் இல்லைன்னு சொல்லி ரிபோர்ட் குடுத்துட்டாங்க. இப்ப இருக்குற டெஸ்டிங் யுனிட் மட்டுமில்லை, பெரிய ப்ரொக்ராமிங் கம்பெனியான CP(Cut-throat Programming) கம்பெனில கூட யாருக்கும் இதுல எரர் இருக்கா இல்லையன்னு உறுதியா சொல்ல முடியலை. இந்தக் கோடிங் எழுதினது எல்லாம் DMK(Data Mining Knowledge)-ன்னு ஒரு கம்பெனி. திடீர்னு ஒரு நாள் கோடிங் எழுதின கம்பெனில வேலை பாத்த ஆரோக்கிய ராஜா-வை டெஸ்டிங் யுனிட் ஆளுங்க சும்மா விசாரிச்சிருக்காங்க. அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம், 'வரும்... ஆனா வராது' ரேஞ்சுக்கு பதில் சொல்லிருக்காரு ராஜா. அவங்களுக்கு இவரு மேல சந்தேகம் அதிகமாயிடுச்சு. உடனே அவங்களோட டெல்லி ஆபீஸுக்கு இவரை கூட்டிட்டுப் போய் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ராஜாவும் தனக்கு தெரிஞ்ச ப்ரொக்ராமிங் அறிவை வெச்சு சமாளிச்சுப் பாத்தி

சப்பாத்தி

இளநிலைக் கல்லூரி நாட்களில் எனது டிபன் பாக்ஸ் மிகப் பிரபலம். எனது அம்மா செய்து தரும் சப்பாத்திகளுக்காக. சப்பாத்தி அத்தனை மெதுவாக இருக்கும். அதற்கு சைட்-டிஷ் பெரும்பாலும் உருளைக் கிழங்கு குருமாவக  இருக்கும். சாப்பிட்ட பிறகு 2 - 3 மணி நேரமாவது அந்தக் குருமா வாசனை கையில் இருக்கும். சப்பாத்தி கொண்டு செல்லும் நாட்களில் அதை நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவேயில்லை. சக மாணவர்களின் டப்பாக்களை லவட்ட ஒரு குழுவே இருக்கும். இதன் தலைவர் விக்கி என்கிற விக்னேஷ். பிரேம், சண்முகம், முத்துராஜா, ராஜாக்கண்ணு, ஆறுமுகம், ஜெயபாலன், பாரி இவர்களெல்லாம் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள். சிலர் அவ்வப்போது மட்டும் உறுப்பினராவார்கள். 3வது / 4வது ஹவரின்போதே அவர்கள் கட்சிப் பணி யை ஆரம்பித்து விடுவார்கள். முதலில் மாட்டுவது பிரசாத்தின் டப்பாவாகத் தானிருக்கும். அவன் தினமும் முட்டை கொண்டு வருவான். இது அவனுடன் பள்ளியில் படித்த விக்கிக்கு தெரியும். அதனால் அவனது முதல் குறியே பிரசாத்தின் டப்பா தான். அடுத்ததாக மாட்டுவது மதிவாணனின் டப்பா. அவன் கொண்டுவரும் ஆனியன் ரைஸ், எனது சப்பாத்தியைப் போல அத்தனை பிரபலம். ஆனியன் ரைஸ் கொண்டு வந்

புரியலை. என்ன சொல்ல வர்றீங்க?

கணவன் ஷங்கருக்காக காத்திருந்துவிட்டு அப்போது தான் படுத்தாள் லேகா. அடுத்த 10 நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஷங்கர் தான் பார்ட்டி முடிந்து திரும்பியிருந்தான். ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தாள். தண்ணியடிச்சுட்டு வந்தா கதவை திறக்க மாட்டேன், என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தாள். ஆனாலும், எதிர்பார்த்தது போலவே தண்ணியடித்துவிட்டு தான் வந்திருந்தான். இடது பக்கம் வெளியே எடுத்து விடப்பட்ட சட்டை, வலது பக்கம் இன்னமும் இன்ஸர்ட் செய்யப்பட்டு இருந்தது. ஒரு கை மட்டும் முழங்கை வரைக்கும் மடிக்கபட்டு இருந்தது. மற்றொரு கை, கஃப் பட்டன் மட்டும் கழட்டி விடப்பட்ட நிலையில். ஒரு காலில் மட்டும் சாக்ஸ் இருந்தது. சற்று தள்ளிப் பார்த்தாள். கேட் அருகிலேயே ஷூ-வும் ஒரு கால் சாக்ஸ்-ம் இருந்தது. கண்கள் இரண்டும் சிவப்பேறி வீங்கியிருந்தன. அந்தக் கண்களுடன், இவளைப் பார்த்து, ரொமாண்டிக்காக கண்ணடித்தான். செல்போன் கயிறுடன், முதுகு பக்கம் தொங்கி கொண்டிருந்தது. கழுத்தில் கட்டியிருந்த டை, பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைக்கப் பட்டு, முழங்கால் வரைக்கும் தொங்கி கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஒசாமாவைக் கண்ட அமெரிக்கப் படைகள் போல அத்த

அநாதைப் பணம்

குமரவேல், இப்போது அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாமானியன். ஒரு காலத்தில் அவனது குடும்பத்திற்கு பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தது. அவனது தாத்தா ஞானவேல். அவரது பேரைச் சொன்னலே ஊரில் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்தவர். பல ஏழைப் பெண்களின் கழுத்தில் தாலி ஏறியதே அவர் செய்த பொருளுதவியால் தான். பிறருக்குக் கொடுத்தும், சொந்தங்களால் ஏமாற்றப்பட்டும் சொத்துக்கள் கரைந்தன. குமரவேலின் தந்தை சக்திவேலின் காலத்தில் ஒரு சிலவற்றைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களும் போய்விட்டது. இதனால் தந்தை செய்துவந்த தான தர்மங்களை சக்திவேலால் தொடர முடியவில்லை. குமரவேல் பிறந்த பிறகு கஷ்ட ஜீவனம் தான் என்ற நிலை. சில வருடங்களில் தொழிலில் வந்த லாபத்தால் கஷ்டத்திலிருந்து மீண்டு, ஓரளவுக்கு நல்ல நிலையை அடைந்தார் சக்திவேல். ஆனால் மனைவியின் புற்று நோய் செலவிற்கே அவரது வருமானம் சரியாக இருந்தது. இவரிடமிருந்த பணத்தைக் கொண்டு சிலகாலம் தான் மனைவியின் மரணத்தை தள்ளிப் போட முடிந்தது. அம்மா இறந்த பிறகு குமரவேலுக்கு எல்லாமே சக்திவேல் தான். தாத்தாவின் சொத்துக்கள் கிடைக்கவில்லையே தவிர குமரவேலுக்கு

அவள் பெயர் கணினி

Image
வழக்கமாகச் செல்லும் பிரௌசிங் சென்டரில் அதி மும்மரமாக 'சாட்'டிக் கொண்டிருந்தான் வினய். சாட்டிங் அக்கவுன்ட் இல்லாமல் இந்த இன்டர்நெட் யுகத்தில் இப்படியும் ஒரு ஆளா என அவனது சக நண்பர்கள் கிண்டலடித்ததன் காரணமாகவே அவன் பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கினான். அதுவரை அவனது கேர்ள் பிரண்டுகளெல்லாம் யார் மூலமாகவோ அறிமுகமானவர்கள் தான். ஆனால் இப்போது பேஸ்புக்கில் வெளிநாட்டு யௌவன நங்கையர்கள் கூட நண்பிகள் ஆனார்கள். விளைவு, இப்போது அவனுக்கே அவன் எத்தனை தளங்களில் மெம்பர் எனத் தெரியாத அளவிற்கு வந்துவிட்டது. இரண்டு வாரங்களாக அவனுக்கு 'சாட்'டிங்கின் போது மோகம் வரக் காரணம் ப்ரிஸில்லா. தற்செயலாக ஒரு சாட் ரூமில் நுழைந்தபோது பெயர் வசீகரமாகப் பட்டதால் 'ஹாய்' என்றொரு மெசேஜை தட்டினான். பெரும்பாலும் பெண்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் இருக்காது என்பதால் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லைதான் என்றாலும், பதில் வந்தவுடன் சற்றே ஆர்வமானான். 27 / M / Hyderabad, என அனுப்பிவிட்டுக் காத்திருந்தான். 22 / F / B'lore, என பதில் வந்தவுடன் குஷியாகிவிட்டான். இப்படித்தான் அவனுக்கு அவள் அறிமுகமானாள். பின்னர், பரஸ்

சித்திரைப் பௌர்ணமி - 2

Image
பக்கத்து ஊர்ல, 3 நாள் திருவிழா நடத்துவாங்க. இங்க உற்சவரும் மூலவரும் வேற வேற கோவில்ல இருப்பாங்க. உற்சவர் மட்டும் தான் ஊருக்குள்ள இருப்பார். மூலவர் ஊரைவிட்டு வெளியில தனியா தோப்புக்குள்ள இருப்பார். முதல் நாள் குதிரை வாகனத்தில் சாமி வீதியுலா. ரெண்டாவது நாள், பெருமாள் ரெண்டு அம்பாளுடன் சப்பரத்தில் வீதியுலா. மூன்றாவது நாள் மஞ்சள் நீராட்டு. ஊரே களைகட்டும். ஹைலைட்டே 2 வது நாள் நடக்கும் கரகாட்டம் தான். எனவ ஊர்லருந்து மட்டுமில்லாம அக்கம் பக்கத்தில இருக்குற ஊர்லருந்தெல்லாம் அந்த ஊருக்கு ஆளுங்க வருவாங்க கரகாட்டம் பாக்க. தாய்க்குலங்கள், தந்தைக்குலங்கள் தொடங்கி ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் உள்பட பட்டாணி திங்கிற சிறுசுலருந்து பல்லுப்போன பெருசு வரைக்கும், கோவில் பக்கத்தில தான் கூடியிருப்பாங்க. போலீஸ்காரங்க எல்லாம் வந்திருப்பாங்க. அட, கரகாட்டம் பாக்க இல்லைங்க. திருவிழா பந்தோபஸ்துக்கு. அந்த ஊர்ல மொத்தம் 10 கும்பு. கும்புன்ன ஒவ்வொரு சமூகத்தை சேந்தவங்களும் ஒவ்வொரு கும்பு. நாயக்கர், பிள்ளைமார், கள்ளர், மறவர், செட்டியார் இப்படி 10 கும்புகள் உண்டு. ஒவ்வொரு கும்புக்கும் ஒவ்வொரு தலைவர், ஒவ

சித்திரைப் பௌர்ணமி

Image
"பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்". சித்திரைப் பௌர்ணமி-ன்ன உடனே நிறைய பேருக்கு ஞாபகத்துக்கு வர விஷயம் இதுவாகத் தானிருக்கும். ஆத்தைக்(ஆறு) கண்டதுமில்லை, அழகரை சேவிச்சதுமில்லை-ன்னு சொல்றது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எங்க குடும்பத்துக்கு பொருந்தும். இத்தனைக்கும் எங்க ஊர்லருந்து மதுரை ஒன்னும் ரொம்ப தூரமெல்லாம் கிடையாது. அப்பறம் ஏனிந்தத் தாமதம்? யார் செய்த குற்றம்-ன்னு எல்லாம் யோசிக்கவே வேண்டாம். மதுரைக்கு போய் பாத்ததில்லை-ன்னு சொன்னனே தவிர, அழகர் ஆற்றில் இறங்குறதை பாத்ததேயில்லை-ன்னு சொல்லலை.(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்). எங்க ஊர்லயே, எங்க கோவில்லயே அந்த நிகழ்ச்சி அதே நாளில், அதே நேரத்தில் நடக்கும். அதனால மதுரைக்கு போகவேண்டிய அவசியமில்லாம போச்சு. அதுவும் மதுரையில 1 குதிரை தான். 1 அழகர் தான். ஆனா எங்க ஊர்ல, 2 குதிரை. 2 அழகர். எப்படின்னு கேக்கறீங்களா? அதைச் சொல்லத்தானே இத்தனை பில்டப்பு... எங்க ஊர்லயும், பக்கத்துக்கு ஊர்லயும், வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. ரெண்டு கோவிலுக்கும், என் தாத்தாவோட தாத்தா காலத்துல இருந்து நாங்க தான் கைங்கர்யம் & டிரஸ்ட்டி