என்னை நோக்கிப் பாயும்... பைரவர்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo77Lua0yd1_mQq1NB82s-AiiPNfr9y7O8Ytiyp2VfbEfgFAb71edQe7fJXc2w7j6CgiXytW8LMrZfrGEKqy2SJ9eFjfehYTO2W5eRpzJbBnObSZiDSxztR9IYo-z2TH-SVNfMIX82i_8/s640/Walk1-1200x650.jpg)
கிராமங்களில் நாய்கள் சர்வ சாதாரணம். வீட்டிற்கு ஒன்று இருக்கும். அல்லது வீதிக்கு இரண்டோ மூன்றோ. அவ்வப்போது வீதியில் யாரேனும் சோறு இடுவார்கள். அந்த வீதிக்கு காவல் அந்த பைரவ/பைரவிகள். எங்கள் வீட்டிலும் கூட நாய் வளர்த்தோம். நான் பிறக்கும் சமயம் வரையில் அதற்கு முன்பும் குறைந்தபட்சம் 10 மாடுகள், 2-3 நாய்கள் இருக்குமாம். எனக்கு விபரம் தெரிந்த பிறகு 1-2 மாடுகள், அவ்வப்போது 1 நாய் என்றானது. ------------------------ நானும் தங்கமணியும் வாக்கிங் போவதுண்டு. இளையவனின் கண்ணில் படாமல், சாவியை எடுத்து கதவு திறக்கும் சத்தம் கூட வராமல், வீட்டை விட்டு ஓடிப்போய்... நடப்போம். அவன் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். தானும் வாக்கிங் வருவேன் என்று அழுது புரண்டு அடம்பிடிப்பான். சில சமயம் சாக்ஸும் ஷூவுமாக அவனிடம் மாட்டிக்கொள்வோம். அழுவான்.. பெற்ற மனம் பித்து. அழுகையைப் பார்க்கமாட்டாமல் அவனையும் சாக்ஸும் காலுமாக கிளப்புவோம். அப்பறம் எங்க வாக்கிங்.. நான் MBBS படிக்கறேன். நீ வயசான ஆளு.. எம்பி எம்பி BS படி என்று வசூல்ராஜாவில் சொல்வது போல நான் கொஞ்ச நேரமும், தங்கமணி கொஞ்சநேரமும் அவன் கையைப் பிடித்து நடை